சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய பயணத்தில் அடுத்த நகர்வு!!!

எம்.ஐ.சர்ஜூன்-
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய பயணத்தில், உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய செயற்பாட்டாளர்களால் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்த கலந்துரையாடல் 2019.09.06 இல் சாய்ந்தமருது மக்கள் பணிமனையில் நடைபெற்றது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது சுயேற்சை குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள், மீனவ சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் உட்பட பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு நகர சபையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு முன்னெடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைத்தனர்.

கலந்துரையாடல் என்று அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தபோதும் ஒரு பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்ததுபோல் பொதுமக்கள் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -