இமாம் ஹுசைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புனித அடக்கஸ்தளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தீன் கொடியினை முத்தமிட்டு இறை நம்பிக்கையுடன் நம்பிக்கையுடன் கண்ணீர் சிந்திய கல்குடா வாழ் ஷியா முஸ்லிம்களின் இறை வழிபாட்டினை நேற்று புதன் கிழமை (11-03-2019) கல்குடாவில் காணக்கூடியதாக இருந்தது.
பொதுவாக கல்குடா பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஷியா முஸ்லிம்களின் கொள்கை பரப்பு நடவடிக்கைகளும், அவர்களுடைய மார்க்க ரீதியிலான செயற்பாடுகளும் அதிகரித்து வருகின்ற நிலைமை ஒரு புறமிருக்க முற்றிலும் மாறுபட்ட நிலையில் அவர்களுக்கு எதிரான கொள்கையினையுடைய சுன்னி முஸ்லிம்க|ளின் பாரிய எதிர்ப்புக்களும் பரவலாகவே இருக்கின்றது.
இந்த நிலையிலே குறித்த இமாம் ஹுசைனுடைய புனித அடக்கஸ்தலத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் தீன் கொடியானது கல்குடாவில் உள்ல உள்ள இமாம் ஜாபர் சாதிக் பணிபமையில் அதன் பணிப்பாளர் மெலலவி அப்துல் ஹலீமின் தலமையில் வைக்கப்பட்டு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என முஹ்ப்பீன்களின் கண்ணீருக்கு மத்தியில் முத்தமிடப்பட்டு இமாம் ஹுசைனுடைய தியாக திருநாள் ஞாபகப்ப்டுத்தப்பட்டது.
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
RELATED POSTS
கல்குடா ஷியா முஸ்லிம்கள் அழுது புலம்பல்(வீடியோ)
Reviewed by
impordnewss
on
9/12/2019 05:18:00 AM
Rating:
5