கடந்த 14ஆம் திகதி மரணித்த இந்த சகோதரர் யார்-கண்டு பிடிக்க உதவுங்கள்

டந்த 11/07/2019 அன்று மாலை 05.00 மணியளவில் ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் வைத்து நடந்த மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவமொன்றில் மோதுண்டு மயக்கமுற்ற இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய முன்தினம் (14/07) மரணமானார்.

பிரதான வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த இவர் வீதியை அவசரமாக கடந்து செல்ல ஓடிச்சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினால் மோதுண்டதால் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த இவரை உடனடியாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள்.
.இவரை அடையாளப்படுத்தக்கூடிய் எந்தவொரு ஆவணங்களும் இவரிடம் இருக்கவில்லை.

உடற்பரிசோதனையின்போது #ஹத்னாசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இவர் யாரென இன்றுவரை அடையாளம் காண முடியாமவில்லை.
மரணமடைந்து இரு நாட்களாகின்றது.

அடையாளம்கான யாருமில்லாதவிடத்து
இன்னும் 12 நாட்களின் பின்னரே பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டு அரச செலவில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே,
தயவுசெய்து இவரை அடையாளம் தெரிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

நாட்டின் பல பாகங்களுக்கும் இத் தகவல் சென்றடைய உதவுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -