கிண்ணியா குறிஞ்சான் கேணி நூலக வாசகர்களுக்கும் பிரதேச சபை தவிசாளருக்கு இடையிலான சந்திப்பு


அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா பொது நூலக சிரேஷ்ட நலன்புரி சங்கத்தினருக்கும் கிண்ணியா பிரதேச புதிய தவிசாளர் எம்.எச். சனூஸ் அவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (03) கிண்ணியா பிரதேச சபை நூலகத்தில் இடம் பெற்றது.

இச்சந்திப்பின் போது கிண்ணியா பிரதேச சபை பொது நூலகத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
இதன்போது சிரேஷ்ட நலன்புரிச் சங்கத்தில் புதிய தவிசாளரை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவம் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்குடனும், நூலகத்தை நவீனமயப்படுத்தும் நோக்குடன் விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது
கிண்ணியா பிரதேச சபை நூலகத்தினை ஒரிரு வாரத்துக்குள் வாசகர் நலன் கருதி கவர்ச்சிகரமாக செய்ய வேண்டிய வேலைகளை கூறுங்கள் அதனை செய்து தருவதாகவும் தவிசாளர் உறுதியளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -