கிண்ணியா பொது நூலக சிரேஷ்ட நலன்புரி சங்கத்தினருக்கும் கிண்ணியா பிரதேச புதிய தவிசாளர் எம்.எச். சனூஸ் அவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (03) கிண்ணியா பிரதேச சபை நூலகத்தில் இடம் பெற்றது.
இச்சந்திப்பின் போது கிண்ணியா பிரதேச சபை பொது நூலகத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
இதன்போது சிரேஷ்ட நலன்புரிச் சங்கத்தில் புதிய தவிசாளரை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவம் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்குடனும், நூலகத்தை நவீனமயப்படுத்தும் நோக்குடன் விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது
கிண்ணியா பிரதேச சபை நூலகத்தினை ஒரிரு வாரத்துக்குள் வாசகர் நலன் கருதி கவர்ச்சிகரமாக செய்ய வேண்டிய வேலைகளை கூறுங்கள் அதனை செய்து தருவதாகவும் தவிசாளர் உறுதியளித்தார்.