அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியலை வீசி இஸ்மாயிலுக்கு வழங்க வேண்டாம் என்று அன்றே சொன்னேன். ஆனால் கட்சியில் உள்ளவர்கள் அதனை தட்டிக் கழித்தனர்.
இன்று - அன்று நான் சொன்னது - அதே நபராலேயே அரங்கேறியிருக்கின்றது.
வீசி இஸ்மாயில் எனும் நபருக்கு எம்பி பதவியை வழங்கினால் மறுகணம் அவர் - எஸ்பி திஸாநாயாக்கா மூலமாக சுகவில் இணைவார் என்றேன். காலம் பிந்தி சுமார் 3 மாதங்களின் பின்னர் சுகவில் இணைய முயற்சித்து மூக்குடைபட்டுப்போயுள்ளார் இன்று.
மக்கள் காங்கிரஸ் தலைவர் - எனது மதிப்பிற்குரிய ரிஷாத் பதியுதீனிடம் நேரடியாகவே கூறினேன்.அது கடந்த நோன்பு காலம்.
வீசிக்கு வழங்காமல் - சாய்ந்தமருது ஜெமிலுக்கு வழங்குங்கள். அப்போதுதான் கட்சியும் வழரும் என்று கூறி அதற்கான நியாயங்களையும் ஆதாரபூர்வமாக எடுத்துரைத்தேன். ஆனாலும் சில காரணத்தால் வீசிக்கு வழங்க அன்று தலைவர் உந்தப்பட்டார். அதனை இங்கு , இப்போது கூறுவது பொருத்தமில்லை.அது எனக்கும் தலைவருக்கும் மட்டும் தெரிந்த பரம இரகசியம்.
சுகாதார பிரதியமைச்சுத்தான் இன்று வீசிக்கு வழங்கப்படவிருந்த அமைச்சு. எல்லாம் பக்காவா அரங்கேறிக் கொண்டிருந்த போதுதான் பிரதமர் மஹிந்த தலையிட்டு - கட்சிகளை உடைக்க வேண்டாம் - ரிஷாத்தின் ஆதரவு இன்றைக்கு இல்லாவிட்டாலும் பிறிதொரு நேரத்துக்கு தேவைப்படும் என்று கூறியது மட்டுமன்றி " இனியாவது இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருங்கள் வீசி" என்று கண்டிப்புடன் கூறி அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்றில் பெரும்பான்மையைக் காட்ட பிரதமர் பகீரத முயற்சி மேற்கொள்ளும் இத்தருனத்தில் கூட பிரதமரின் செயற்பாடு மயிர்க் கூறச் செய்கின்றது.
இனி வீசி செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவருக்கு - தலைவர் ரிஷாத் பதியுதினால் வழங்கப்பட்ட எம்பி பதவியை உடன் இராஜினாமா செய்து விட்டு, மக்கள் காங்கிரஸ் தலைவர் - தவிசாளர் உட்பட உயர்பீடத்தினர் மற்றும் போராளிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரிவிட்டு சொந்த ஊர் சென்றடைவதுதான்.
சம்மாந்துறை எனும் சொந்த ஊரும் வீசியை மன்னிக்காது , கட்சியும் அவரை மதிக்காது.