திருகோணமலையைச் சேர்ந்த டாக்டர் ரவிச்சந்திரன் நடராஜகுரு அவர்கள் பங்களாதேஷ், டாக்கா நகருக்குப் பயணமானார்.

ஹஸ்பர் ஏ ஹலீம்-Action Against Hunger நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பாலின சமத்துவம் மற்றும் பாலின அடிப்படையிலான அவசரகால போஷணை நிரலாக்கமும் (Gender Equality, Gender Based Violence Analysis and Nutrition in Emergencies) எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையின் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டுள்ளார்.இதன் மூலம் தன்னை ஒரு சர்வதேச வளவாராக அடையாளப் படுத்திக் கொள்கின்றார்.
இம் மாதம் 15 தொடக்கம் 19திகதி வரை ஐந்து நாட்கள் டாக்காவில் அங்கிருந்தார்.
இவர் கடந்த காலங்களில் ஜப்பானின் கியுஷு சர்வதேச பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அவசர நிலைமைகளின் போது அதிக மக்கள் தொகையில் சுகாதார முன்னெடுப்பு, கோலாலம்பூரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்ற அவசர நிலைமைகளின் போது தொற்றுநோய்கள், பங்களாதேஷ், டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய அனர்த்த பதிலிறுப்பு குழு உறுப்பினர் பயிற்சி, நேபால் காட்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய எச்.ஐ.வி/எய்ட்ஸ் வலையமைப்பு போன்ற பல செயற்பட்டறைகளில் கலந்து கொண்ட இவர் தெற்காசிய பிராந்திய சமூகம் சார்ந்த சுகாதார முதலுதவி பயிற்சி வளவாளருமாவார்.
தம்பலகமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் காலம் சென்ற சமாதான நீதவான் அமரர் திரு நடராஜகுரு நேசமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார். பிரபல சமூக சேவையாளரான இவர் இலங்கை நீரிழிவு சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினராகவும், கொழும்பு ஓசியன் சிட்டி அரிமாக் கழகத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார். இலங்கை அரசினால் அகில இலங்கை சமாதான நீதவான் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இவருக்கு தேசபந்து விஷ்வகீர்த்தி ஸ்ரீ என்ற பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டுள்ளது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -