இம் மாதம் 15 தொடக்கம் 19திகதி வரை ஐந்து நாட்கள் டாக்காவில் அங்கிருந்தார்.
இவர் கடந்த காலங்களில் ஜப்பானின் கியுஷு சர்வதேச பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அவசர நிலைமைகளின் போது அதிக மக்கள் தொகையில் சுகாதார முன்னெடுப்பு, கோலாலம்பூரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்ற அவசர நிலைமைகளின் போது தொற்றுநோய்கள், பங்களாதேஷ், டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய அனர்த்த பதிலிறுப்பு குழு உறுப்பினர் பயிற்சி, நேபால் காட்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய எச்.ஐ.வி/எய்ட்ஸ் வலையமைப்பு போன்ற பல செயற்பட்டறைகளில் கலந்து கொண்ட இவர் தெற்காசிய பிராந்திய சமூகம் சார்ந்த சுகாதார முதலுதவி பயிற்சி வளவாளருமாவார்.
தம்பலகமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் காலம் சென்ற சமாதான நீதவான் அமரர் திரு நடராஜகுரு நேசமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார். பிரபல சமூக சேவையாளரான இவர் இலங்கை நீரிழிவு சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினராகவும், கொழும்பு ஓசியன் சிட்டி அரிமாக் கழகத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார். இலங்கை அரசினால் அகில இலங்கை சமாதான நீதவான் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இவருக்கு தேசபந்து விஷ்வகீர்த்தி ஸ்ரீ என்ற பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டுள்ளது.