ரணிலுக்கு அல்லது அப்பாச்சி மஹிந்தவுக்கு ஆட்சியை கொடுக்கவும் - ஞானசார

தற்பொழுது நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை காணப்படுவதால் யாராவது ஒரு தரப்பினர் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலார் மாநாடு இன்று இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்துகொண்டு தமக்கு தேவையான அரசாங்கமொன்றை அமைக்க முடியாது எனின் அந்த பதவியில் இருந்து என்ன பயன் என ஞானசார தேரர் இதன்போது கேள்வி எழுப்பினர்.

இதேவேளை, அரசாங்கத்தை நடத்திச் செல்ல ரணில் விக்ரமசிங்கேவுக்கோ அல்லது உள்ளூராட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று அதிகமானோரின் அப்பச்சியாக மாறியுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கோ இடமளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -