என்னை செருப்பால் அடிப்பதற்கு ஹாபிஸ் நஸீர் முயற்சித்தார்! அலிஷாஹிர் மெளலானா பேட்டி-வீடியோ



ட்டக்களப்பு பாசிக்குடா ஹோட்டலில் இன்று (04) காலை நடைபெற்ற உள்ளூராட்சி மனறத் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கலந்துரையாடலின் போது, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானாவுக்கும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமதுக்குமிடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில் அலி சாஹீர் மௌலானா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் கேட்ட போது அவர் என்னிடம் தெரிவித்தவற்றை அவரது குரலிலேயே கீழே பதிவிட்டுள்ளேன்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் அவர்களைத் தொடர்பு கொண்டு அவரது கருத்தையும் பெற முயற்சித்தேன். தான் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகவும் கூட்டம் முடிவடைந்த பின்னர் தனது பக்க விளக்கத்தை என்னிடம் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி அவரது விளக்கம் கிடைத்த பின்னர் அதனையும் இங்கு பதிவு செய்வேன்.

சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -