எந்த சவாலுக்கும் முகங்கொடுக்கத் தயார் - கிழக்கு முதல்வர்

கிழக்கிலிருந்து போதையை ஒழிக்கு நடவடிக்கையில் எந்தத் தடை வந்தாலும் எதிரகொள்ளத் தயார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்

கிழக்கிலிருந்து போதையை ஒழிப்பது கடினம் என சிலர் கூறிவருகின்ற போதும் அந்த சவாலை எதிர்கொள்ள தாம் தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்ச்ர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,

கிழக்கில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி நடைபெறவுள்ள போதைக்கெதிரான​ மாபெரும் பேரணி தொடர்பில் வினவியபோதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார்.

போதைப் பொருள் பாவனை காரணமாக நாட்டின் எதிர்கால சொத்துக்களான இளைஞர் சமூகம் கண்முன்னே சீரழிந்து போவதை பார்த்துக்கொண்டிருக்கும் சுயநல அரசியல் தலைமையாக இல்லாமல் எமது எதிர்கால சந்த்தியினரின் நலனுக்காக தாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மைக்கால புள்ளிவிபரங்களின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருளின் ஊடுருவல் அதிகரித்து வருவதையே காண முடிவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தடுப்பதற்கு முறையான பொறிமுறை அவசியம் எனவும் அத்துடன் இன்று பொதுமக்கள் இதுதொடர்பான தகவல்களை வழங்குவதற்கு அச்சப்படும் சூழ்நிலை உள்ளதால் அவர்களின் அச்சம்போக்கி தகவல் வழங்குநரின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் வித்த்தில் பாதுகாப்புத் தரப்பு மற்றும் சிவில் சமூகத்தை உள்ளடக்கிய பொறிமுறையொன்றை உருவாக்குவது அவசியமாகவுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் நசீர்அஹமட் குறிப்பிட்டார்.

மக்களின் பூரண ஒத்துழைப்பு இன்றி கிழக்கிலிருந்து போதையை ஒழிப்பது என்பது சாத்தியமற்ற விடயம் என்பதால் மக்களுடன் இணைந்து போதைப் பொருளை கிழக்கிலிருந்து ஒழிப்பதற்கான முழுமையான முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து போதையை ஒழிப்பதற்கு எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஏறாவூரில் நடைபெறவுள்ள போதைப்பொருளுக்கு எதிரான பேரணியில் அனைவரும் இன மத கட்சி பிரதேச வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அழைப்பு விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -