வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு குறித்து இன்று நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் ஹசித திலஹரத்ன தெரிவித்துள்ளார்.
நெத்தலி, இரு வகை கருவாடுகள், பருப்பு, கடலை மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் 400 கிராம் பால் மா ஆகிய ஆறு அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு குறித்தே இவ்வாறு வர்த்தமானியில் குறிப்பிடப்படவுள்ளது.
இதன்படி நவம்பர் 24ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஹசித திலஹரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.