ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் வெளியானது...!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் பராளுமன்ற உறுபினர்களாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இணையத்தளம் மற்றும் முகநூல்களில் வெளி வந்த செய்திகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கைகளை அதன் தலைவரான நான் வெளியிட வேண்டும். ஆனால் பொய்யான வதந்திகள் வெளிவருவதைப் பார்த்து மக்கள் குழம்பிவிட வேண்டாம். இருக்கின்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளும் யாருக்கு வழங்க வேண்டும் என்பதில் இன்னும் முடிவு வெளியிடவில்லை. ஆனால் விரைவில் அது சம்மந்தமான யார் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்னும் செய்தியினை அறிவிப்பேன் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -