கிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவாடிப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்திலுள்ளது இமாம் அலி என்ற பெயரிலான ஷியா மசூதி.
இந்த மசூதியில் இஸ்லாமியர்கள் சுமார் 150 பேர், இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தான் அணிந்து இருந்த குண்டை வெடிக்க செய்தான்.
இந்த தாக்குதலில் பலர் உயிர் இழந்தனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 30 பேர் இறந்திருக்கலாம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. வெடிகுண்டு மிகுந்த சத்தத்தோடு வெடித்து சிதறியதாக சம்பவ இடத்தின் அருகே உள்ளவர்கள் கூறியுள்ளனர்.
II
சவூதி அரேபியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இன்று தற்கொலை குண்டுத் தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.