சற்று முன்னர் தர்ஹா நகர் அதிகாரிகொட பகுதியில் வீடொன்று இனம் தெரியாத நபார்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த தீ முதலில் மின் ஒழுக்கால் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது வதந்தி என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகொட ஆடைத் தொழிற்சாலைக்கு பின்புறமாகவுள்ள ஒரு வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் இனந்தெரியாத நபர்கள் ஒரு பொருளை உள்ளே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் குறித்த அறை தீப்பற்றியதுடன், அதிலுள்ள பொருட்களும் எரிந்து நாசமடைந்துள்ளது.
வீட்டு உரிமையார் ளுஹர் தொழுகைக்காக வுழு செய்வதற்கு வந்தநேரம் குறித்த அறையிலிருந்து கருகும் வாசணை வந்துள்ளது. பின்னர் அறைக்குள் சென்றபோது, இனந்தெரியாத பொருள் வீசப்பட்டுள்ளதால் பொருட்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளார். உடனே அவர் சத்தமிட்டு அயலவர்களை அழைத்து தீயை அணைத்துள்ளார்.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு தற்போது பொலிஸ், இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகொட பிரதேசம் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தின்போது அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.
0 comments :
Post a Comment