கலாபூசணம் விருது பெற்ற மசூறா சுஹுறுடீன் ஆசிரியை – சம்மாந்துறைக்கு பெருமை



சம்மாந்துறை குரூப் நிருபர் - ஜீ-
லங்கை அரசினால் நடத்தப்பட்ட 40வது அரச கலாபூசண விருது விழா கடந்த 12.01.2026 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இந்த விருது விழாவில் கௌரவிக்கப்பட்ட இருநூறு கலைஞர்களில் ஒரேயொரு முஸ்லிம் பெண்ணாக கவிஞினி, எழுத்தாளர், நாவலாசிரியை, நாடக ஆசிரியை எனப் பல்துறை கலை ஆளுமை கொண்ட சம்மாந்துறை மசூறா சுஹுறுடீன் ஆசிரியை அவர்கள் கலாபூசணம் விருதைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

அவரது இந்தச் சாதனை சம்மாந்துறை மண்ணுக்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில், அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை, பாவலர் பஷீல் காரியப்பர் ரசிகர் வட்டம் உள்ளிட்ட சம்மாந்துறைப் பகுதியிலுள்ள பல்வேறு இலக்கிய அமைப்புகளும், ஊர் மக்களும் மசூறா சுஹுறுடீன் ஆசிரியைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :