கொழும்பில் நடைபெற்ற AM.ROYAL ACADEMY பரிசளிப்பு விழா – பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஹாஷிம் உமர்



கொழும்பு, ஆகஸ்ட் 23 – கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் AM.ROYAL ACADEMY நிறுவனம் ஏற்பாடு செய்த பரிசளிப்பு விழா நேற்று (23.08.2025) மாலை கொழும்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஹாஷிம் உமர் பவுண்டேஷன் தலைவர் ஹாஷிம் உமர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கி அவர்களின் சாதனைகளை பாராட்டினார். விழாவை அக்காடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் அஸ்மா முஸ்தாக் தலைமையேற்றார்.

விழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியையும் பிரதம அதிதி ஹாஷிம் உமர் பார்வையிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கல்விசார் முன்னேற்றங்களை வாழ்த்திப் பாராட்டினார். இந்நிகழ்வில் ஏற்பாட்டாளர் டாக்டர் அஸ்மா முஸ்தாக் அவர்களும், புரவலர் ஹாஷிம் உமர் அவர்களது பாரியாரும் அருகில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.

கல்வி துறையில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இவ்விழா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்களின் பங்கேற்பினால் சிறப்பாகக் கூடி இருந்தது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :