தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் சமீம் தெரிவு!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் TASEU எனப்படும் ஆசிரியர் சங்கத்துக்காக புதிய நிருவாகிகளை தெரிவுசெய்யும் நிகழ்வும் வருடாந்த ஒன்றுகூடலும் 2025.03.04 ஆம் திகதி TASEU வின் 2023/ 2024 ஆண்டின் தலைவரும் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியும் பேராசிரியர் ஏ,எம்.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின்போது புதிய வருடத்துக்கான நிருவாகம் ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. இதில் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் தலைவராகவும் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் உபதலைவராகவும் கலாநிதி எம்.சி. அலிபூட்டோ செயலாளராகவும் பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் உபசெயலாளராகவும் பேராசிரியர் ஏ.எல்.எம். றியால் பொருளாளராகவும் தெரிவாகினர்.

பீடங்களுக்கான பிரதிநிதிகளாக கலை கலாச்சார பீடத்திலிருந்து சிரேஷ்ட விரிவுரையாளர் வி. கமலஸ்ரீயும் முகாமைத்துவ வர்த்தக பீடத்திலிருந்து கலாநிதி ஏ.எல்.எம். ஐயூப்கானும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் சார்பில் கலாநிதி ஏ.எச். றிபாஸும் பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து கலாநிதி ரீ.வி.என்.எஸ். மடுகல்லவும் பொறியியல் பீடத்திலிருந்து கலாநிதி டபிள்யூ. ஜி.சி. டபிள்யூ. குமாரவும் தொழில்நுட்பவியல் பீடத்திலிருந்து கலாநிதி ஐ.எம். காலித்தும் நூலகத்தில் சார்பில் கலாநிதி எம்.எம். மர்சூபாவும் தெரிவாகினர்.

































 













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :