புதிய அரசாங்கத்தின் பட்ஜெட்டை நாங்கள் வரவேற்கிறோம்...! செயலாளர் யஹியாகான். ஐக்கிய மக்கள் காங்கிரஸ்



தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை - ஐக்கிய மக்கள் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

அரசியல் எதிர்காலம் இல்லை என்று உணர்ந்துள்ள எதிர்க்கட்சியிலுள்ள சிறுபான்மை கட்சிகள் - பட்ஜெட்டை எதிர்க்கின்றன.

சூனியமாகிப் போயுள்ள தமது அரசியல் எதிர்காலத்தை மீண்டும் நிலை நிறுத்த இந்த சிறுபான்மை கட்சிகள் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பட்ஜெட்டுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.

மக்கள் - இன்று இந்த சிறுபான்மை கட்சிகளை வெறுக்க ஆரம்பித்துள்ளனர். இதனை கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அவதானிக்க முடிந்தது.
மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். மக்கள் பட்ஜெட்டை ஆதரிக்கின்றனர் ; வரவேற்கின்றனர். சிறுபான்மை கட்சிகளின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

இதேவேளை - சிறுபான்மை கட்சியொன்றின் தலைவர் - சிலரை கூலிக்கமர்த்தி எமது கட்சியையும் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகின்றார். போலியான முகநூல் கணக்குகளை உருவாக்கி இதனை மேற்கொண்டு வருகின்றார். அதனைப் பற்றி எவரும் அலட்டிக் கொள்ளவில்லை.; அலட்டிக் கொள்ளப் போவதுமில்லை என்றும் யஹியாகான் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :