புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் குட்டியானா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள பாடலியா என்ற தனித்துவமான நகரில் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 10 இல் பிறந்தார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது 06 மாத குழந்தையாக தனது குடும்பத்துடன் இலங்கைக்கு குடிபெயர்ந்தார்.
இவர் ஆரம்ப காலங்களில் கேகாலை பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் 1970 க்கு பின்னர் கொழும்பில் வாழ்ந்து வருகிறார். கடுமையான உழைப்பாளியான இவர், பல்வேறு தொழில்களைச் செய்து வாழ்வில் முன்னேறியுள்ளார்.
1994 ஆம் ஆண்டுமுதல் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்தார். 2019 ஆம் ஆண்டு 1000 மாவது பிரதியைப் பெற்றார்.
தனது வாழ்க்கை பயணத்தில் இலக்கியத்தோடு நின்றுவிடாது பல்வேறு சமுகநல திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அண்மையில் காத்தான்குடி பிரதேசத்தில் மின் இணைப்பைப் பெற்று அதற்கான கட்டணங்களை செலுத்த முடியாது தவித்த பல வீடுகளுக்கு வெளிச்சமூட்ட உதவினார். தற்போது கல்விக்கு கணணியின் அவசியத்தை உணர்ந்து அதனையும் கட்டம் கட்டமாக வழங்கி வருகிறார்.
ஹாசிம் உமர் பௌண்டேசன் என்ற பெயரில் ஓர் பௌண்டேசனை உருவாக்கி அதனூடாக அவர் ஆற்றிவரும் சமூக நல பணிகள் எண்ணிலடங்காதவை அவரது பணி தொடர வாழ்த்தும் அதேவேளை அவரை குறித்த விருத்துக்கு பரிந்துரைத்துள்ள தமிழன் பத்திரிகை நிர்வாகமும் பாராட்டுக்குரியது.
0 comments :
Post a Comment