மரபுக் கவிதையின் முன்னோடி கலாபூஷணம் பொன்.சிவானந்தன் காலமானார்!



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கின் மரபுக் கவிதையின் முன்னோடி காரைதீவைச் சேர்ந்த கலாபூஷணம் கவிச்செல்வர் பொன்.சிவானந்தன் (ஓய்வு நிலை அதிபர்)
தனது 83 வது வயதில் நேற்று (24) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (26) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்னார் இலக்கிய உலகில் 38 வருடகாலம் இலங்கியவர்.1996 இல் "சிவானந்தன் கவிதைகள்" என்ற கவிதைத் தொகுதியை எழுதி வெளியிட்டவர். இவர் மதுரகவிமணி கவிமுத்து என்ற பட்டங்களையும் பெற்றவராவார்.

மண்டூரைப் பிறப்பிடமாகவும் காரைதீவை வாழ்விடமாகவும் கொண்ட பொன் சிவானந்தன் காரைதீவு பிரதேச செயலக சாஹித்ய விழாவில் விபுலமாமணி பட்டத்தையும் பெற்றவராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :