தன்னார்வத் தொண்டுநிறுவனம் ஒன்றின்பணியாளர் ஒருவர் வீதி விபத்தில்பலியானதாக மட்டக்களப்பு– கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை மாலை 21.03.2024 இடம்பெற்றஇந்த வீதிவிபத்துச் சம்பவத்தில், கொம்மாதுறை உமாமில் வீதியைச்சேர்ந்த தம்பிநாயகம்சிறிபாலு என்ற 55 வயதுடைய 3 பிள்ளைகளின்தந்தையான தம்பிநாயகம் சிறிபாலு என்பவரேமரணமடைந்தவராகும்.
இவர் கடமைநிமித்தம் சென்றுமட்டக்களப்பு – பதுளை வீதியால் தனது மோட்டார்சைக்கிளில் வீடுதிரும்பிக் கொண்டிருக்கும்போது முதிரையடி ஏற்றம் எனும் இடத்தில் பழுது பார்ப்புக்காகநிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பைகளை ஏற்றியிறக்கும் திண்மக் கழிவகற்றல்கிடங்கின் லொறியொன்றில் மோதுண்டு ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச்சென்ற கரடியனாறுபொலிஸார்; விசாரணைகளை மேற்கொண்டனர். சடலம்சட்ட வைத்திய உடற்கூராய்வுப் பரிசோதனைக்காகசெங்கலடி பிரதேசவைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்புபோதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரணவிசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ்ஆனந்தன் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாகபொலிஸார் மேலதிகவிசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment