அறபுக் கல்லூரி மௌலவிமார்களுக்கான உளவள ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வு



ஹஸ்பர் ஏ.எச்-
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அறபுக் கல்லூரிகள்,மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயமர்வொன்று இன்று (01) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த செயலமர்வில் அன்றாட வாழ்க்கையின் போது ஏற்படும் உளநெருக்கீடுகள் மற்றும் அதனை சமாளித்து எவ்வாறு தங்களது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பிலும் மாணவர்களுடன் உரையாடும் போதும் கல்வி கற்றல் நடவடிக்கைகளின் செயற்பாடுகளின் போது செயற்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது விரிவுரைகளாக வழங்கப்பட்டன. குறித்த செயமர்வுக்கு வளவாளராக மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சம்சீத் கலந்து கொண்டார்.

இதனை சிறுவர் பாதுகாப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.றியால்,முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எம்.பஸ்மி உட்பட மௌலவிமார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :