அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 50,000 பேருக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம்.- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க



Ø 50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் பாராட்டுகின்றனர்...

Ø வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கு நொத்தாரிசு கட்டணம், முத்திரை வரி மற்றும் பிற வரிகளை அரசே ஏற்கிறது...

Ø வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்தால், வீட்டின் முழு உரிமையும் தற்போது வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு மட்டுமே செல்லும்...

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 50,000 பேருக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் அந்த குடியிருப்பாளர்களால் பாராட்டப்படுகிறது.

பல வருடங்களாக இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த போதிலும் தமக்கான உரிமைகள் கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது என பல்வேறு பணிகளில் சிரமங்களை சந்தித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள், அரசு உரிமைப் பத்திரம் வழங்க முடிவு செய்திருப்பது தங்களுக்கு கிடைத்த சிறப்பு என கூறுகின்றனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்க வேண்டிய மாத வாடகை 3000 ரூபாய் இடைநிறுத்தப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்கள், வாடகையை செலுத்த முடியாமல் சில சமயங்கள் இருந்ததாக தெரிவித்தனர். உரிமைப் பத்திரங்கள் தயாரித்தல் மற்றும் பதிவு செய்வதற்கான கட்டணத்தை அரசே ஏற்க முடிவு செய்ததுடன், மேலும் அவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 50,000 குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கு நேற்று (05) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்டது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கு நொத்தாரிசு கட்டணம், முத்திரை கட்டணம் மற்றும் ஏனைய வரிகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு மட்டுமே வீடுகளின் முழு உரிமையையும் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பல்வேறு நகர்ப்புற திட்டங்களின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படும் வீடுகளில் இருந்து மாதந்தோறும் 3,000 ரூபாய் அறவிடப்படுகிறது. இந்த உரிமைப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் படி வாடகை அறவிடுவதும் முற்றாக நிறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் 70 வீதமான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைப்பத்திரங்களை சட்டரீதியாக வழங்கி காணி மற்றும் வீடுகளின் வாரிசுகளாக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் சட்ட நிலைகள் தொடர்பில், குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீட்டுப் பத்திரங்களை வழங்குவது தொடர்பாக, , சட்டமா அதிபருடன் ஏற்கனவே கலந்துரையாடி தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளனர்.

இந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வ பத்திரங்களை வழங்கிய பின்னர், குடியிருப்பாளர்களின் பிரதிநிதித்துவத்துடன் நிறுவப்பட வேண்டிய கூட்டு ஆதன முகாமைத்துவ கூட்டுத்தாபனத்தினால் இந்த வீடுகளின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்த உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் குறித்து தமது கருத்துக்களை தெரிவித்தனர்.


01. சந்திரிகா தமயந்தி - கிராண்ட்பாஸ், சிறிமுத்து உயன வீட்டுத் திட்டம்.

வீட்டுப் பத்திரங்களை எமக்கு வழங்குவதையிட்டு ஜனாதிபதிக்கு நாம் மிகவும் நன்றி கூறுகின்றோம். இதற்காக பலர் மிகவும் சிரமப்பட்டு வாடகை செலுத்தி வருகின்றனர். அதனை இல்லாதொழிப்பதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு நாம் அனைவரும் நன்றி கூறுகின்றோம். அமைச்சர் பிரசன்னவ அவர்களுக்கு உண்மையிலேயே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரினதும் மிகப்பெரிய கனவு வீட்டு உரிமைப் பத்திரம் பெறுவதுதான். அந்த கனவை நனவாக்கிய ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் மிக்க நன்றிகள்.

02. தினுக துஷாந்த - கிராண்ட்பாஸ், சிறிமுத்து உயன வீடமைப்புத் திட்டம்.


இந்த வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கி வாடகை அறவிடுவதை இடைநிறுத்துவது உண்மையிலேயே மக்களுக்கு பெரும் நிம்மதி. நாட்டின் பொருளாதார சூழ்நிலையில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்ததற்காக. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரும்பாலான ஏழை மக்கள் வசிக்கின்றனர். எனவே, இந்த நடவடிக்கைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உண்மையாக உரிமைப் பத்திரம் இல்லாததால் வங்கியில் கடன் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது. குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டன. மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இப்போது இந்த உரிமைப் பத்திரத்தை கொடுப்பதன் மூலம், இது எங்களுக்கு ஒரு பெரிய நிம்மதி, ஏனென்றால் அவர்கள் தங்கள் வீட்டில் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்க முடியும். இதைச் செய்து தரும்படி நாங்கள் பலரைக் கேட்டுக் கொண்டோம். யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லை. எதிர்காலத்தை நினைத்து இந்த முடிவை எடுத்ததற்கு அனைத்து மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

03. சுனில் சாந்த - கிராண்ட்பாஸ், சிறிமுத்து உயன வீட்டுத் திட்டம்.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் அனைத்து குறைந்த வருமானம் பெறுவோருக்கும் உறுதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்துள்ளார். ஜனாதிபதி எடுத்த முடிவு வேறு எந்த ஜனாதிபதியும் எடுக்காத முடிவு. இன்று இந்த நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாகவே இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக சிறிமுத்து உயன அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என்ற வகையில் ஜனாதிபதிக்கு நாம் முதலில் நன்றி கூறுகின்றோம். 30 ஆண்டுகளுக்கு வீட்டு வாடகை செலுத்த வேண்டும். அதனை தடுத்து நிறுத்தி உரிமைப் பத்திரங்கள் வழங்குவதையிட்டு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதேபோன்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களுக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு பாரிய ஆதரவை வழங்கினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த வீடுகளின் வாடகையை பெற்றுக்கொள்வதில் மிகவும் அசௌகரியமாக இருந்தனர். ஏனெனில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :