ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம் இவ்வருடத்துடன் 10 ஆண்டு நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 10 ஆண்டு நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நேற்று இடம்பெற்றது.

பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர்.MM ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 2023ம் ஆண்டு மெய்வல்லுனர் போட்டியில் வெற்றிகளை பெற்ற மாணவர்களும் 2023 ஆண்டு 5ம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பிரதேச கலாச்சார போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்

மாணவர்களது கலை நிகழ்வுகளுடன் விமர்சையாக இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பனிமனையின் வலயக் கல்வி பணிப்பாளர் MS.அமீர் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டதுடன்னர்.

பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதி ஆகியோரது பணிகளை நன்றியுடன் பாராட்டி பாடசாலை சமூகம் சார்பில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் HM .நியாஸ் தலைமையிலான குழுவினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .




















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :