போக்குவரத்து தடைப்பட்ட பாதைகளினூடாகவும் நிவாரணப்பணி முன்னெடுத்த கிழக்கின் கேடயம் !



நூருல் ஹுதா உமர்-
டைமழை காரணமாக அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி அணைக்கட்டுகள் எல்லாம் திறக்கப்பட்டமையால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை சந்தித்து வரும் இவ்வேளையில் அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனையொட்டியதாக கிழக்கின் கேடயம் மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைசேனை போன்ற பிரதேசங்களுக்கான நிவாரணப் பணியை முன்னெடுத்தது.

கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் " அயலவருக்கு உதவுவோம்" செயற்திட்டத்தினூடாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அனர்த்தம் ஆரம்பித்த நாள் முதல் இந்த நிவாரணப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அம்பாறை- கல்முனை வீதியில் அபாயகரமான முறையில் வெள்ள நீர் வழிந்தோடி கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் கிழக்கின் கேடயம் அமைப்பினர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கான நிவாரணப் பணியை மூன்று அடிக்கு மேற்பட்ட வெள்ளத்தில் மிதந்தவாறு முன்னெடுத்தனர்.

அதனை தொடர்ந்து சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள இடைத்தங்கல் முகாம் மற்றும் வீடுகளிலும் இந்த நிவாரணப் பணியை கிழக்கின் கேடயம் முன்னெடுத்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :