திருகோணமலை மாவட்ட ஏழை மாணவர்களுக்கு இலவச அப்பியாச கொப்பிகள் வழங்கும நிகழ்வு



எம்.ஏ.முகமட்-
அன்பின் இல்லம் தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து வசிக்கும் செல்வரூபன் அபிவானன் என்பவரின் முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு இலவச அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை பாலையூற்று அன்னாஸ் மண்டபத்தில் (12) இடம் பெற்றது.

திருகோணமலையில் மாவட்டத்தில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இலவச கொப்பிகளை திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சமன்கே ஜெயரட்ன வழங்கி வைத்தார்.

நூறு மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப் பட்டன.

இந்நிகழவில் சி.ஐ.ஜெயரட்ன,பி,சி.ஜவாஹிர்,ரோசல்டா மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :