மாணவர்களுக்கான “விசேட கற்றல் செயல்பாட்டு மையம்”



திருகோணமலை மாவட்டம் மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் 07-12-2023 அன்று ஏடு ஐக்கிய இராச்சியத்தின் (AEDU-UK) அனுசரணையுடன் “விசேட கற்றல் செயல்பாட்டு மையம்” ஆரம்பிக்கப்பட்டது. இதனூடாக அந்த பாடசாலையிலிருந்தும், அண்மித்த பாடசாலைகளிலிருந்தும் க.பொ.த சாதாரணதர, உயர்தர, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடாத்தப் படும்.

இவ் நிகழ்ச்சிக்கு ஏடு ஐக்கிய இராச்சியத்தின் (AEDU-UK) சார்பில் திரு சதானந்தன், இலங்கை ஏடு ஒருங்கிணைப்பாளர் திரு வரதன், திருகோணமலை ஏடு ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், அண்மித்த பாடசாலை அதிபர்கள் ஆகியோருடன், மூதூர் பிரதேச கல்வி இயக்குநர் திருமதி நஷீர் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :