கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவை மற்றும் நன்னடத்தை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக சுப்ரமணியம் கரன் பதவியேற்பு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவை மற்றும் நன்னடத்தை அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக சுப்ரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய தனது கடமையினை கடந்த புதன்கிழமை திருகோணமலையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை நிருவாக சேவையில் முதலாம் தர அதிகாரியான இவர் ஏற்கனவே ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி, வாகரை பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

தற்போது அவர் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவம், சமூக சேவை மற்றும் நன்னடத்தை அமைச்சின் உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :