அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டம்..


முனீரா அபூபக்கர்-

>தற்போது அனுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 8 உப திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன...

>வாகன நிறுத்துமிடங்கள் நான்கு, பொது இடங்களின் அபிவிருத்தி, சுற்று வட்ட அபிவிருத்தி, விளக்கப் பலகைகள் மற்றும் நடைபாதையை அழகுபடுத்தும் திட்டம்...

>இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திறந்தவெளி அரங்கு மற்றும் சுரபுர திறந்தவெளி அரங்கு ஆகிய இரண்டு அரங்குகளையும் புனரமைத்து வருகின்றது...

- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 8 உப திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வாகன தரிப்பிடங்கள் நான்கு, பொது இடங்களை அபிவிருத்தி செய்தல், சுற்றுவட்ட அபிவிருத்தி, விளக்க பலகைகள் மற்றும் நடைபாதை அலங்கார திட்டம் என்பன இந்த 8 உப திட்டங்களில் உள்ளடங்குவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிலையான வடிகால் அமைப்புகள், திறமையான நுண்ணிய நீர் வழங்கல் அமைப்புகள், புல்வெளிகள் பராமரிப்பு மற்றும் நுழைவுச்சீட்டு கவுண்டருடன் கூடிய தானியங்கி கதவுகள் போன்ற பசுமை வடிவமைப்பு அம்சங்களை உள்ளடக்கிய நவீன வசதிகளுடன் இந்த வாகனத் தரிப்பிடம் அமைந்தள்ளன.

இது தவிர இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன திறந்தவெளி அரங்கு மற்றும் சுரபுர திறந்தவெளி அரங்கு ஆகிய இரண்டு அரங்குகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த திரையரங்குகள் அனுராதபுரத்தின் கலாச்சார விழுமியங்களை அதிகரிக்கவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் உதவும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் நகரின் வரலாற்று கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையிலும் அதன் புனிதத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் சமச்சீர் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான கடன் வசதி ஒப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கும் அபிவிருத்திக்கான பிரான்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் 2016 டிசம்பர் 1 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இருப்பினும், கோவிட் -19 பரவல் மற்றும் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஒட்டுமொத்த திட்டம் குறைக்கப்பட்டது. அதன்படி, துணைத் திட்டங்களை மட்டும் முடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் அனுராதபுரம் நகரத்திற்கும் சுற்றுலா வளர்ச்சிக்கும் தெற்கு பல்வகை போக்குவரத்து முனையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

தெற்கு பல்வகை போக்குவரத்து முனையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :