நிந்தவுர் கடற்கரைப் பிரதேசத்தில் எஞ்சியிருந்த பயன்தரு தென்னை மரங்கள் பாரிய கடல் அரிப்பினால் காவுகொள்ளப்பட்டுள்ளது.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ண்மையக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு கடல் பரப்பில் அடிக்கடி ஏற்படும் கடல் கொந்தளிப்பால் ஏற்படும் பாரிய அலைகள் கரையை நோக்கி வருவதனால் தினசரி நிந்தவுர் கடற்கரை பிரதேசம் காவுகொள்ளப்படுவதனால் மீனவர்களும் சுற்றயல் பிரதேச குடியிருப்பாளர்களும் சொல்லொனாதுயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்

கடற்கரைப் பிரசேத்திலுள்ள பயன்தரும் தென்னைமரங்கள் கடலரிப்பினால் தரையில் வீழ்ந்துகாணப்படுவதுடன் அவற்றின் வேர்களும் தரைக்கு மேலாக வெளிவந்தும் உள்ளது. இதனால் தென்னம் தோட்டங்களை பராமரித்து வருவோர் பெரும் நஸ்டத்தை எதிர்நோக்கிவருவதுடன் மீனவர்கள் தாம் ஓய்வுஎடுப்பதற்கும் , தமது தோணி ,படகு , மீன்பிடி வலை என்பவற்றை திருத்துவதற்காகபயன்படுத்தும் இயற்கையான நிழலும் இல்லாமல்போயுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

நிந்தவுர் கடற்கரை பிரதேச மீனவர்கள் தமது தோணி மற்றும் படகுகளையும் நிறுத்திவைப்பதற்கு தற்போது போதிய இடவசதியும் , தமது மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்கான மீன்வாடிகளும் இல்லாமலிருப்பது தமக்கு பெரும்கவலையளிப்பதாகவும் , இந்த நிலமைஏற்படுவதற்கு ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகமும் ஒரு காரணமாகும் என பிரதேச மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்

தற்போது கடலரிப்பை தடுப்பதற்கான தடுப்புக் கல் இடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறாக தொடர்ச்சியாக கடலரிப்பினால் நிந்தவுர் கடற்கரை பிரதேசம் காவு கொள்ளப்பட்டு போகுமேயானால் எதிர்காலத்தல் இப்பிரதேசத்தில் கடற்கரையொன்று முழுமையாக இல்லாமல்போனலும் போகலாம் என்ற அச்சம் இப்பிரதேசமக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :