மன்னம்பிட்டி பஸ் விபத்து ! ஏ.சி. யஹியாகான் அனுதாபம்



ன்னம்பிட்டி பஸ் விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என முஸ்லிம் காங்கிரஸின் பதில் பொருளாளர்

ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்..

அத்துடன் - விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலன்பெற பிரார்த்திப்பதாகவும் யஹியாகான் குறிப்பிட்டுள்ளார்..

இதுவரையான தகவல்களின் படி - 11 பேர் மரணித்து , 40 பேரளவில் காயமடைந்துள்ளனர் என அறியக் கூடியதாக உள்ளது.

உண்மையில் இந்த துயர் நிறைந்த சம்பவம் என்னையும் மிக வேதனைக்குட்படுத்தி உள்ளது. மரணித்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு - காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.

மரணித்தோரில் - அம்பாரை மாவட்டம் ஒலுவில் பகுதியைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவரும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே - மரணித்தோரின் குடும்பங்களின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன் என்றும் யஹியாகான் தனது அனுதாப அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏ.சி. யஹியாகான்
பதில் பொருளாளர்
முஸ்லிம் காங்கிரஸ்..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :