இளைஞர்களை தொழில் முனைவர்களாக மாற்றுவதற்கான தொழில்வாண்மை கருத்தரங்கு !



நூருல் ஹுதா உமர்-
தொழிவாய்ப்பற்று புதிய தொழிவாய்ப்பை நாடியுள்ள இளைஞர்களை தொழில் முனைவர்களாக மாற்றுவதற்கான தொழில்வாண்மை கருத்தரங்கொன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் கிழக்கு நட்புறவு ஒன்றிய ஏற்பாட்டில் SOFTA Care அனுசரணையில் இன்று (02) நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் பிரபல தொழில் முனைவரும், கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளரும் SOFTA Care நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சமூக சிந்தனையாளருமான பொறியலாளர் எம்.எம்.நஸீர் பிரதான வளவாளராக கலந்துகொண்டு தொழில் முயற்சி, தொழில் மேம்பாடு, தொழில் வளர்ச்சி உட்பட பல்வேறு விடயங்களை தன்னுடைய அனுபவத்துடன் கூடியதாக இளைஞர்களுக்கு விளக்கினார்.

தொடர்ந்தும் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிதிப் பணிப்பாளரும், சட்டமொழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு கல்வியுடன் கூடிய தொழில் பயிற்சிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.கஸ்ஸாலியின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிர்வாக பணிப்பாளர் தபாலதிபர் யூ.எல்.எம். பைசர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். சமிழுள் இலாஹி, பிரதேச செயலக அதிகாரிகள், சாய்ந்தமருது பிரதேச இளைஞர், யுவதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :