பொத்துவில், அறுகம்பையில் ஜேர்மன் நாட்டு உல்லாசப் பிரயாணியின் கையடக்க தொலைபேசி மற்றும் பணம் திருட்டு



அஸ்ஹர் இப்றாஹிம்-
றுகம்பை கடலில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேர்மன் நாட்டவர் ஒருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியும் கைப்பையிலிருந்த பணமும் திருடப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொத்துவில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக ஒலுவில், பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 32 வயதுடைய இருவர் கடந்த புதன்கிழமை ( 11) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கிணங்க எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :