மட்டக்களப்பு அம்பிளாந்துறை திசைகாட்டி மையம் ஒழுங்கு செய்திருந்த பிரதேசத்தின் பல்துறையிலும் சாதனைபடைத்த சாதனையாளர்களை பாராட்டி விருதுகள் வழங்கி கெளரவித்த நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி குணபாலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் ந.குகதாசன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் மாணவர்கள் , பெற்றோர்கள் , பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் என பலரும் பங்கேற்றனர்.

0 comments :
Post a Comment