"இளைஞர்களின் பங்களிப்புடன் பசுமையான இலங்கை "கல்முனை கடற்கரை பூங்காவில் மரநடுகை !



கல்முனை நிருபர்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்ற"இளைஞர்களின் பங்களிப்புடன் தூய்மை மற்றும் பசுமையான இலங்கை" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டம்,கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை பிரதேச இளைஞர்கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கல்முனை கடற்கரை பூங்கா முன்றல் பகுதியில் மரநடுகை இன்று( 05) பிற்பகல் இடம்பெற்றது

இதன் போது அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக் அலி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அஸ்கி,கல்முனை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் ஆர்.எம்.யசார்,உப தலைவர் எம்.என்.எம்.அப்ராஸ், உட்பட இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :