"இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நல்லிணக்கத்திற்காக உரத்து பேசுவோம் உண்மை பேசுவோம்" எனும் கருப்பொருளில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையிலான வீதி நாடகம் ஒன்று இன்று (9) வியாழக்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ACTED நிறுவனத்தின் இலங்கையில் மதங்களுக்கிடையிலா செயற்திறன் மிக்க இணக்கப்பாட்டிற்காக சிவில் சமூகம் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் எனும் செயற்திட்டத்தின் கீழ் இவ் வீதி நாடகம் இடம் பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள திருக்கோவில் 03 கோவிலூர் சகவாழ்வு சங்கத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வழிகாட்டலின் கீழ் இவ் வீதி நாடகம் திருக்கோவில் பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. மோகனராஜா , கிராம நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கந்தசாமி, தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் அ.ஆன்ஸி யுரேமினி, திருக்கோவில்03 கிராம உத்தியோகத்தர் ரி. சுகிர்தராஜன் திருக்கோவில் மெடிஸ் மிசன் தமிழ் மகாவித்தியாலய ஆசிரியர் எஸ்.சுமன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சகவாழ்வு சங்க உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment