கொழும்பு பெரிய பள்ளிவாசலில் 75வது சுதந்திர தினத்தின் இஸ்லாமிய சமய நிகழ்வு


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
75வது சுதந்திர தினத்தின் இஸ்லாமிய சமய நிகழ்வு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று காலை இடம் பெற்றது.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வை இன்று காலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல் திணைக்களம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி ஸப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அத்துடன் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள் உலமாக்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விசேட துஆ பிரார்த்தனைககளும் இடம் பெற்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :