புத்திஜீவிகளையும் சமூக செயற்பாட்டாளர்களையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் தேர்தலில் தனியாகவும் கூட்டணியாகவும் போட்டியிட NFGG பரிசீலனை.



ள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் , நல்லாட்சிகான தேசிய முன்னணி(NFGG) இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பல விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக பரிசீலித்து வருகின்றது. குறிப்பாக தாங்கள் போட்டியிட உத்தேசித்துள்ள பிரதேசங்களில் புத்திஜீவிகள் சமூக செயற்பாட்டாளர்கள், தேசிய மற்றும் மக்கள் நல அரசியல் சிந்தனையாளர்களையும் இணைத்துக்கொண்டு சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் சாதகமான கூட்டணிகளை அமைத்தும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றது.

தேசிய ரீதியில் இது தொடர்பான மிக முக்கியமான கலந்துரையாடல் ஒன்றினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ,ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) நடாத்தியிருந்தது. இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் அப்துர் ரஹ்மான், தேசிய அமைப்பாளர் பி எம் முஜிபுர் றஹ்மான், தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஜே.எம். மன்சூர் (முன்னாள் அதிபர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பலகட்ட முக்கிய கலந்துரையாடல்கள் தற்போது NFGG உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக நேற்றைய தினம் காத்தான்குடி தலைமைத்துவ சபை உறுப்பினர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் அதனைத் தொடர்ந்து தேசிய மட்டத்திலான தலைமைத்துவ சபையினருக்கிடையிலான Zoom தொழில்நுட்பம் வாயிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

இக் கலந்துரையாடல்களின் போது பல முக்கியமான விடயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன் , சாதகமான பல தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் NFGG பல தரப்பினர்களுடனும் பரிசீலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :