க.பொ.த சா/த பரீட்சையில் 9A பெற்று கோணாவத்தை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவி பாராட்டி கௌரவிப்பு.



எஸ்.அஷ்ரப்கான்-
ட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் சார்பாக சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சகல பாடங்களிலும் 9A சித்திபெற்று கோணாவத்தை மண்ணுக்கு பெருமை சேர்த்த முஹம்மட் காசீம் றனா பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
செக்டோ - ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நியாஸ், அமைப்பின் ஆலோசகர் ஏ.எம்.சம்சுடீன், உபதலைவர் ஏ.எல்.றிம்சான் உள்ளிட்ட குழுவினர் இன்று (26) குறித்த மாணவியின் வீடு தேடிச் சென்று மாணவியினை பாராட்டி கௌரவித்தனர்.
சாதனைக்கு சொந்தக்காறியான மாணவி றனா அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மட் காசிம், யூ.எல்.வஜீரா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

குறித்த மாணவியின் சாதனைக்கு வழிகாட்டிய அதிபர், ஆசிரியர் களுக்கும் செக்டோ ஸ்ரீலங்கா அமைப்பினர் நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :