ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப்பொருளாளராக மீண்டும் ஏ.சி. எஹியாகான் நியமனம் !



நூருல் ஹுதா உமர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 வது பேராளர் மாநாட்டுக்கு முந்திய கட்டாய உயர்பீட கூட்டம் கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்றது. இதன்போது அக்கட்சியின் பிரதிப்பொருளாளராக சாய்ந்தமருதை சேர்ந்த ஏ.சி. எஹியாகான் சபையோரால் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்டாய உயர்பீட கூட்டத்தில் முதலில் பொருளாளராக சபையோர் ஏ.சி. எஹியாகானை தெரிவுசெய்திருந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசால் காசிமுக்கு இப்பதவியை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டவுடன் தாமாக முன்வந்து அப்பதவியை பைசால் காசிமுக்கு ஏ.சி. எஹியாகான் விட்டுக்கொடுத்து விட்டு பிரதிப்பொருளாளராக தன்னை மாற்றிக்கொண்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது மக்களின் பேரியக்கம். இதில் பதவிகளை விட மக்களின் நலனே முதலில் கவனிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் பிரதிநிதிகளை கௌரவிக்கவேண்டிய தேவை எம் எல்லோருக்கும் இருக்கிறது. தலைமை அப்பதவியை அவருக்கு வழங்கும் விருப்பத்தை என்னிடமே வழங்கியதால் தலைமைத்துவ கட்டுப்பாட்டையும், கட்சிக்கான விசுவாசத்தையும் முதற்கொண்டு இந்த முடிவை எடுத்தேன். பேராளர் மாநாட்டில் கணக்கறிக்கை சமர்ப்பிக்கும் வாய்ப்பையும் நானே பெற்றேன். தொடர்ந்தும் மு.காவின் வளர்ச்சியில் என்னை அர்ப்பணிக்க தயராக உள்ளேன். கட்சி பதவிகளை விட மக்கள் சேவையே முக்கியம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :