ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் கிண்ணியா அமைப்பினரின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிவில் சமூக அமைப்புகளின் திறன் விருத்தியை மேம்படுத்தும் செயலமர்வொன்று கிண்ணியா விஷன் மண்டபத்தில் இன்று (18) நடைபெற்றது.
PEACE எனும் இப்புதிய செயற்திட்டம் சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்ட செயற்பாடுகளை வலுவூட்டுவதற்கான மக்களின் ஈடுபாட்டை மேம்படுத்தல்
People’s Engagement and Action For Civic Empowerment(PEACE) எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 20 சிவில் சமூக அமைப்புகளை ஜனநாயக மற்றும் அபிவிருத்தி துறையில் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என் ஜயவிக்ரம பிரதான விருந்தினராகவும், மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. அத்தநாயக்க, நிறுவனத்தின் தலைவர் ரஸீனா சாலே, பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷிக் அலாப்தீன் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் வளவாளராக திரு. சுஜீவன் சித்ரவேல் மற்றும் அவரது உதவியாளர் திரு. மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த 20 சிவில் சமூக அமைப்புகளைக் கொன்ட திருகோணமலை சிவில் மன்றம்(Trinco Civic Forum) உருவாக்கப்பட்டது.
0 comments :
Post a Comment