பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்பு



பாறுக் ஷிஹான்-
பொலிஸாரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்குகளின் அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரை பிடிப்பதற்காக அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த நிலையில் 18.08.2022 அன்று வியாழக்கிழமை கைதானார்.

இதன் போது நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த மருதமுனை வி.சி வீதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் கைதானதுடன் வசம் 1200 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :