கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் இயங்கி வரும் நத்வதுல் புஹாரி அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா



ஹஸ்பர்-
திருகோணமலை மாவட்டம்,கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் இயங்கி வரும் நத்வதுல் புஹாரி அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று (19) மாலை குறிஞ்சாக்கேணியில் உள்ள ஷரீஆப் பிரிவு வளாகத்தில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் அல் ஹாபிழ் அஷ்ஷெய்க் எஸ்.எம்.முனீர் தலைமையில் இடம் பெற்ற குறித்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் தலைவர் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதில் 2019,2020,2021,2022 ஆண்டுகளுக்கான வெளியான மாணவர்களுக்கான பட்டங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. இதில் அல் ஹாபிழ்,அல் ஆலிம்,கத்முல் புஹாரி ஆகிய பட்டங்களை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி உட்பட பெற்றார்கள், நலன் விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :