திருகோணமலை மாவட்டம்,கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் இயங்கி வரும் நத்வதுல் புஹாரி அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று (19) மாலை குறிஞ்சாக்கேணியில் உள்ள ஷரீஆப் பிரிவு வளாகத்தில் இடம் பெற்றது.
கல்லூரி அதிபர் அல் ஹாபிழ் அஷ்ஷெய்க் எஸ்.எம்.முனீர் தலைமையில் இடம் பெற்ற குறித்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் தலைவர் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதில் 2019,2020,2021,2022 ஆண்டுகளுக்கான வெளியான மாணவர்களுக்கான பட்டங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. இதில் அல் ஹாபிழ்,அல் ஆலிம்,கத்முல் புஹாரி ஆகிய பட்டங்களை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி உட்பட பெற்றார்கள், நலன் விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment