கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை வரலாற்றில் மாணவர்கள் அதிகூடிய இடங்களை பெற்று மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவு !



எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை வலய பாடசாலைகளுக் இடையிலான மெய்வல்லுனர் போட்டி இம் மாதம் 4ம்,5ம், திகதிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை வலயத்தில் உள்ள 5 கோட்டங்ககளை சேர்ந்த சுமார் 30 பாடசாலைகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவ மாணவிகள் 5 முதல் இடங்களையும் 9 இரண்டாம் இடங்களையும் 4 மூன்றாம் இடங்களையும் பெற்று மாகாண மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

இவ் வெற்றியானது அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை வரலாற்றில் அதிகூடிய போட்டி நிகழ்ச்சிகளில் மாகாண மட்ட போட்டியில் மாணவ மாணவிகள் பங்குபற்றுவது இதுவே முதல் முறையாகும் இவ் வீர,வீராங்கனை
களுக்கு பயிற்றுவித்த எம்.ஏ.எம்.றியால்,யூ.எல்.எம்.
சிபான்,ஏ.டப்ளியு.எம்.ஆசாத்கான் ஆகியோருக்கு பாடசாலை அதிபர்.எம்.எஸ்.எம்.பைசால் மற்றும் பிரதி அதிபர்கள்,ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம்,நலன் விரும்பிகள் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :