துர்நாற்றம் குறித்து ஆராய டிரோன் கமரா உதவி பெறப்பட்டது-கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை



பாறுக் ஷிஹான்-
ல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீசுகின்ற துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை சாய்ந்தமருது நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பகல் இரவு வேளைகளில் திடிரென இத்துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தற்போது வீசுகின்ற துர்நாற்றம் குறித்து ஆராய்வதற்காக இரு நாட்களாக களவிஜயம் செய்ததுடன் டிரோன் கமரா உதவியுடன் தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கல்முனை சாய்ந்தமருது பகுதியில் வீசுகின்ற துர்நாற்றம் எங்கிருந்து வருகின்றது.எதனால் வருகின்றது என்பதை எந்தவொரு ஆதாரத்துடன் அறிய முடியவில்லை.இருந்த போதிலும் சுமார் 3 மணி நேரமாக சந்தேகிக்கப்படடுகின்ற இடங்கள் அதனை சூழவுள்ள பகுதிகள் யாவும் டிரோன் கமராவின் உதவியுடன் கண்கானிக்கப்பட்டு சில இடங்கள் சந்தேகத்தில் அடையாளப்படுத்தப்பட்டன.

பின்னர் இவ்வாறு அடையாளப்படுத்தபட்ட இடங்களை நோக்கி கால்நடையாகவும் நீர் நிலைகளில் உள்ள கழிவுகளை ஆராய்வதற்காக வள்ளங்களின் உதவியுடனும் கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி சென்று பார்வையிட்டார்.

இதன் போது அங்கு சந்தேகத்தில் அடையாளப்படுத்தபட்ட இடங்களில் கல்முனை சாய்ந்தமருது மக்கள் அண்மைக்காலமாக அனுபவித்து வருகின்ற துர்நாற்றத்தை அடையாளம் காண முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், சாய்ந்தமருது, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் ,பொதுசுகாதார பரிசோதகர்கள் ,அடங்கிய குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அத்துடன் துர்நாற்றம் குறித்து இதுவரை காரணம் கண்டறியப்படாத நிலையில் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஒன்றிற்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையிலான சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை உயரதிகாரிகள் அடங்கிய குழுவினர் கள விஜயமொன்றை மேற்கொண்டதுடன் அப்பகுதியில் உள்ள தனியார் ஒருவரினால் நிர்வகிக்கப்படும் விலங்கறுமனையின் நிலைமையினையும் ஆராய்ந்துள்ளனர்.

எனவே துர்நாற்றம் ஏற்படுவதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க கல்முனை மாநகர முதல்வர் இதனை ஆய்வு செய்து துர்நாற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து உரியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :