உயர்ஸ்தானிகர்கள் உக்ரைனுடனான தங்கள் கூட்டொருமைப்பாடு மற்றும்
அக்கறையின் ஒரு வெளிப்பாடாக வெள்ளிக்கிழமை கொழும்பில் ஒன்று
கூடினர்.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் இறையாண்மை கொண்ட நாட்டுக்கு
எதிரான ரஷ்யாவின் தூண்டுதளற்ற தாக்குதலை கண்டிப்பதுடன் உக்ரைனில்
அது மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோருகின்றன.மார்ச் 2ஆம் தேதி, 141 ஐ.நா. பொதுச் சபை உறுப்பு நாடுகள்
உக்ரைனில் ரஷ்ய அரசாங்கத்தின் பேரைக் கண்டிப்பதற்காக ஒன்றிணைந்து வாக்களித்தன. மேலும் உக்ரைனில் மோசமடைந்து வரும் மனிதாபிமான சூழ்நிலை தொடர்பான தமது ஆழ்ந்த அக்கறையினையும் போரை முடிவுக்குக்கொண்டு வருதற்கான உக்ரேனிய மக்களின் வேண்டுகோளுக்கான தமது ஒருமித்த ஆதரவினையும் வெளிப்படுத்துவதற்காக , அவுஸ்த்ரேலியா, கனடா. ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா மாலை தீவு, நெதர்லாந்து, நியூஸ்லாந்து, நோர்வே, ரொமேனியா, சுவிட்சர்லாந்து,துருக்கி,, ஐக்கிய இராட்சியம்மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள்
இன்று இலங்கையில் ஒன்றுகூடினர்.
'ஒரு இறையாண்மையுள்ள, ஜனநாயக நாட்டில் அமைதியாக வாழ்வதற்கான உக்ரேனிய மக்களின் உரிமை மற்றும் தங்கள் எதிர்காலத்தை தேர்ந்தெடுப்பதற்கான அவர்களின் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக பல பிற நாடுகளுடன் ஒன்றாக இணைந்து நிற்பதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கூறினார்.
ரஷ்யாவின் போர் உலகத் தலைவர்களிடையே முன்னெப்போதுமில்லாத ஒரு
ஒற்றுமையினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸில் உள்ள
பல்லாயிரக்கணக்கான குடிமக்களின் அமைதியான எதிர்ப்பு உட்பட,
ஜனாதிபதி புட்டின் போரினைத் தேர்வு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க
உலகம் முழுவதுமுள்ள மக்கள் தொடர்ந்தும் ஒன்று கூடுகின்றனர்.
உக்ரைனுக்கும் ரஷ்ய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள்
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், இலங்கையில் உள்ள
இப்பதினேழு தூதரகங்களின் பிரதானிகள் உட்பட உலகெங்கிலும் உள்ள
குரல்கள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துவதற்கும் உக்ரேனில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கும் தொடர்ந்தும் அழைப்பு விடுக்கும்.
0 comments :
Post a Comment