திறமையை தேடி வீடு சென்று வாழ்த்திய குழு..!



திறமையான சிறுவர், சிறுமிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல நிகழ்ச்சிகளை செய்துவரும் எ.எம்.ஆர் டோக் சமூக நிறுவனம் அண்மையில் கண்டி மாவட்டம் அக்குரனை பிரதேசத்தை சேர்ந்த சிறுவனை வீடு தேடிச்சென்று வாழ்த்தி நினைவுச்சின்னம், சான்றிதழ், பதக்கம் என்பவற்றை வழங்கி கெளரவித்தது.

கண்டி மாவட்டம் அக்குரனை பிரதேசத்தை சேர்ந்த அஸ்மியா, ரிகாஸ் ஆகிய தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஸீத் ரிகாஸ் எனும் மூன்று வயது சிறுவன் பல திறமைகளுடன் இருப்பதை அடையாளம் கண்டதை அடுத்து எ.எம்.ஆர் டோக் சமூக நிறுவனம் வீடு தேடி சென்று வாழ்த்தி பரிசில்களும் வழங்கி கெளரவித்தது.
எ.எம்.ஆர் டோக் சமூக நிறுவனத்தின் தலைவர் எ.றொஸான் முஹம்மட், அதன் முகாமையாளர் எ.எம்.ஸாகீர் அஹமட் உள்ளிட்ட குழுவினர் இவ் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :