ஆளுமையுள்ள பெண்களுக்கு பாராட்டும் கௌரவமும்!!



பைஷல் இஸ்மாயில் –
“நாடும் தேசமும் அவளே” எனும் தொனிப் பொருளில் மகளிர் தின நிகழ்வு ஹலோ எப்.எம். தவிசாளர் எப்.எம்.சரீக் தலைமையில் நேற்று மாலை (13) திருகோணமலை குளக்கோட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் உப்புவெளி பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பொஸிஸ் அதிகாரி ஏ.காயத்திரி ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது, ஆளுமையுள்ள பெண்களின் திறமைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :