தேசிய நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு நல்குமாறு பைஸர் முஸ்தபா வேண்டுகோள்



மினுவாங்கொடை நிருபர்-
தேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு, ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, சகல தரப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (10) வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட சம்மேளன மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

கொழும்பு - விகாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற இந்த மாநாடு, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பைஸர் முஸ்தபா அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,

இன்றைய காலத்தில், மக்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும், தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே சிறந்தது. இதை விட்டு விட்டு, அரசியல் இலாபம் கருதி அல்லது காட்டிக் கொடுக்கும் நோக்குடன் சமூகங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளுக்குரிய செயல்களை யாராவது செய்வார்களேயானால், அது மன்னிக்க முடியாத பாரிய குற்றமாகும் என நான் கருதுகிறேன்.

குறுகிய நோக்கங்களை மனதிலிருந்து அகற்றி, தேசிய நல்லிணக்கத்திற்காக சாதி, சமய, கட்சி பேதங்களை மறந்து, அனைவரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்பதோடு, கட்சி பேதங்களை மறந்து எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்பவும் முன்வர வேண்டும்.

அத்துடன், அடுத்து வரும் தேர்தல்களில் பெண்களுக்கும் 25 வீத முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களையும் பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இவ்வாறு பெண்களுக்கு போட்டியிடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுக்கும். இது தொடர்பில் தற்போது கட்சிக்குள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது என, இதன்போது பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :