மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
ம்மாந்துறை நாபீர் பௌண்டேஷனினால் மருதமுனை அல் -மினன் வித்தியாலயம், மருதமுனை அல் மதீனா வித்தியாலயம் மற்றும் மருதமுனை ஹிக்மா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஒரு தொகை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முஹம்மட் சிபான் பஹுறுத்தீன் இன் வேண்டுகோளின் பேரில் நாபீர் பௌண்டேசன் மற்றும் ஈ.சி.எம். நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் கலாநிதி உதுமான் கண்டு நாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான இந்த கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முஹம்மட் சிபான் பஹுறுத்தீன், பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :