ஓட்டமாவடி எல்லை வீதி திருத்த வேலைகள் இழுத்தடிப்பு; மக்கள் விசனம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி எல்லை வீதி (பௌசி மாவத்தை) திருத்த வேலைகள் இழத்தடிப்பு செய்யப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியின் வடிகான் உடைந்த நிலையில் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்ட போது, அதனை பிரதே மக்கள் ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

பாதிப்படைந்து காணப்பட்ட இவ் வீதி ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த வீதியின் திருத்த வேலைகள் இதுவரை முழுமை பெறாமல் இழத்தடிப்பு செய்யப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இவ் வீதியின் திருத்த வேலைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :